விநாயகர் காரிய சித்தி மாலை பாடல் வரிகள்






வேலையில்லா திண்டாட்டம் பெருகி வரும் இந்நாளில் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவும், செய்யும் தொழிலில் இடர்கள் விலகவும், அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கவும் விநாயகர் அஷ்டகம் என்னும் காரிய சித்தி மாலை பெரிதும் உதவும்.


தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள விநாயகர் கோவிலிலுள்ள விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி அன்று சர்க்கரை சேர்க்காத பால் கோவா வாங்கி வந்து சந்தன காப்பு செய்வது போல் பால் கோவா காப்பு செய்து மேற்கண்ட அஷ்டகத்தை 1 முறை பாராயணம் செய்யவும். காப்பு செய்த பால் கோவாவில் பாதியை அங்கிருப்பவர்களுக்கு வழங்கவும்.



பின்பு வீட்டிற்கு வந்து சக்தி கணபதி படம் அல்லது விநாயகர் சிலை முன்பு 8 முறை பாராயணம் செய்து மீதி பால்கோவாவை வீட்டிலுள்ள அனைவருக்கும் வழங்கவும். இதை மூன்று சங்கடஹர சதுர்த்திகள் செய்யவும். கோவிலின் விநாயகர் சிலைக்கு ஏற்ப பால்கோவாவின் அளவை வாங்கிக் கொள்ளவும்.

90 நாட்களுக்கு வீட்டிலோ அல்லது வெளியிலோ அசைவம் சாப்பிடுவதை நிறுத்தவும். கண்டிப்பாக பலன் கிடைக்கும். காரியசித்திமாலையை தொடர்ந்து 3 நாட்கள் சூரிய உதயத்திற்கு முன்பாகவும், சூரியன் மறைந்த பின்பும் 1 முறை பாராயணம் செய்தால் அவர்கள் செய்யும் செயல்களில் (நல்ல செயல்கள்) தோல்வி என்பதே இல்லாமல் வெற்றி கிட்டும். கெட்ட செயல்கள் செய்தால் விளைவு எதிர்மறையாகத் தான் இருக்கும்.



தொடர்ந்து 8 நாட்கள் படித்து வர மன உளைச்சல் நீங்கி நிம்மதியை பெறுவர். சக்தியின் மைந்தன் உங்களின் மன துன்பங்களை அறவே நீக்குவான். மனநிம்மதியில்லாதவர்கள் இதை படித்து வந்தால் மனநிம்மதி பெறுவர் என்பது திண்ணம்.
சதுர்த்தி நாளில் நல்ல சிந்தனையுடன் 8 முறை படித்து வர அட்டமாசித்திகளும் கிட்டும். தொடர்ந்து 60 நாட்கள் விடாமல் 1 முறை படித்து வர அரச வசியம் உண்டாகும்.
இதன் ஆழ்ந்த உண்மைப் பொருள் விளக்கம் பெருங்குருமார்களிடம் சீடர்களாகி தெரிந்து கொள்ளலாம். மச்ச முனிவரின் சித்த ஞான சபையிலும் சீடராகி தெரிந்து கொள்ளலாம்.
தினமும் 21 முறைகள் படித்து வர குழந்தை செல்வம் மற்றும் கல்விச் செல்வம் கிட்டும்.

நன்றி-ஆன்மீகச்சுடர்

No comments

Powered by Blogger.